‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி, சென்னை-28 படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய்.. சினிமாவில் 15 வருடங்களை கடந்துவிட்ட ஜெய், தேர்தல் நாளான நேற்று தனது 38வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த பிறந்தநாளன்று அவரே எதிர்பாராத வகையில் சர்ப்ரைஸாக நேரிலேயே வந்து, ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு.
சிம்புவை தனது துவக்க காலம் தொட்டே ஆதர்ச வழிகாட்டியாக, அண்ணனாக பின்பற்றி வரும் ஜெய், சிம்புவின் இந்த அதிரடி வருகையால் நெகிழ்ந்து விட்டார். இதுகுறித்து கூறியுள்ள ஜெய், “முற்றிலும் எதிர்பாராத மகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் வந்ததில் எனக்கான சந்தோசம் அளவிட முடியாதது. என்னுடைய பிறந்தநாளை இன்னும் சிறப்பான நாளாக்கியதற்கு நன்றி” என கூறியுள்ளார் ஜெய்.
ஜெய்யின் மீது கொண்ட பாசத்தால், தான் நடித்த வேட்டை மன்னன் படத்தில் அவரையும் தன்னுடன் இணைந்து நடிக்க வைத்தார் சிம்பு.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் சில நாட்களிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.




