தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பு இரவு நேரப் படப்பிடிப்பாக பெரிய அரசியல் மாநாடு காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் மண் தரையில் சிலம்பரசன் படுத்து உறங்கும் புகைப்படங்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவே வெளியிட்டுள்ளார்.
“நடிகர்களின் வாழ்க்கை, எளிமையின் மனிதன், இரவு நேரப் படப்பிடிப்பில், மாநாடு படப்பிடிப்புக்கு இடையில்” எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
சிம்புவின் எளிமையைக் கண்டு ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.