பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
‛பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் பல படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தவர், இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். தெலுங்கில் அவர் நடித்துள்ள நாரப்பா(அசுரன் ரீ-மேக்), விராட பர்வம் படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இதுதவிர சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த பிலிம்பேர் நிகழ்ச்சியில் கருப்பு நிற உடையில் கிளாமராக உடையணிந்து பங்கேற்றார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து இருந்தார் பிரியாமணி. இதற்கு ஏராளமான லைக்ஸ்களும், கருத்துகளும் குவிந்தன.
ரசிகர் ஒருவர் பிரியாமணியின் இந்த கிளாமர் போட்டோவை பார்த்து, ‛என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என கேட்டார். அதற்கு, ‛‛எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள். அவர் சம்மதித்தால் நான் உங்களை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறேன்'' என கூலாக பதிலளித்தார் பிரியாமணி. இவரின் இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலானது.