புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
விஜய்சேதுபதி இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திண்டுக்கல், மதுரை, பழனி பகுதியில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.
இந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க திருமண மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து பழனி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் படப்பிடிப்பு தளத்திறகு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முக கவசம் அணியாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதே படக்குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தியபோது அபராதம் கட்டினர்.