புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
கொரோனா தாக்கத்திற்குப் பிறகு பெரும்பாலான மக்கள் சினிமா தியேட்டர்களையே மறந்துவிட்டார்கள். கடந்த வருடம் கொரோனா தாக்கம் வந்த போது பலரும் ஓடிடி தளங்களில் உறுப்பினர்களாக இணைந்தார்கள். அந்த உறுப்பினர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள புதிய படங்களை நேரடியாகவே தங்கள் தளங்களில் வெளியிடும் முறையை ஓடிடி நிறுவனங்கள் ஆரம்பித்தன. அவற்றின் காரணமாக மக்கள் வீட்டிலேயே நிம்மதியாக படங்களைப் பார்க்கும் முறைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டபின் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் அதிக அளவில் வந்தார்கள். அதனால், படமும் நன்றாக வசூலித்து லாபத்தைக் கொடுத்தது. தற்போது தியேட்டர்கள் பக்கம் வராமல் தவிர்க்கும் ரசிகர்களை மீண்டும் வரவைக்க என்ன செய்யலாம் என திரையுலகினர் சிலரிடம் கேட்டோம். அதில் சிலர் சொன்ன ஆலோசனை சிறப்பாக இருந்தது.
அதாவது ரஜினி படம் என்றாலும் புதிய நடிகரின் படம் என்றாலும், 500 கோடி ரூபாய் படம் என்றாலும் 5 கோடி ரூபாய் படம் என்றாலும் தியேட்டர்களில் ஒரே டிக்கெட் கட்டணம் தான். எனவே, சிறிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைக்கலாம். 150 ரூபாய் கட்டணம் என இருப்பதை 100 ரூபாய், 50 ரூபாய் என மாற்றினால் ரசிகர்கள் வரலாம்.
அதோடு இன்னமும் சில தியேட்டர்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் திண்பண்டங்களை அரசின் உதவியோடு தடுக்கலாம். எந்த பில்லும் கொடுக்கப்படாமல் விற்கப்படும் அவற்றை முறைப்படுத்தி பில்லுடன் மட்டுமே விற்க வைக்க வேண்டும். இந்த இரண்டு மாற்றங்களைச் செய்தாலே போதும் ரசிகர்கள் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்கிறார்கள்.
ஓடிடியில் மூழ்கிக் கிடக்கும் மக்களை ஏதாவது செய்து வரவழைத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் ஒன்றன்பின் ஒன்றாக தியேட்டர்களை மூடும் நிலை ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.