விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
மைனா, கும்கி என இயற்கையின் பின்னணியில் படம் இயக்கிய பிரபுசாலமன் அடுத்து இயக்கி உள்ள படம் காடன். 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் காட்டு யானைகளின் தற்போதையை வாழ்வியல் தொடர்பானது. ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வருகிற 26ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து இயக்குனர் பிரபுசாலமன் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு படத்திற்கும் நான் நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் வழக்கமான கதையைச் சொல்லும் இயக்குநராக இருக்க விரும்பவில்லை. நாட்டுக்காக, சமூகத்துக்காக, காதலுக்காகச் சண்டையிடும் ஒரு ஹீரோவை காட்ட விரும்பவில்லை. அதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.
நமது சுற்றுச்சூழல், காடுகள், நம்மை போலவே வாழும் உரிமை உள்ள விலங்குகள் இவற்றை பற்றி யார் பேசுவது. காடுகளில் யானையின் பங்கு மிகப்பெரியது. கும்கி எடுக்கும்போது யானைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். இந்தியாவில் யானைகளின் நிலை என்ன என்பது குறித்து உண்மைக்கு நெருக்கமாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் காடன். இந்த படம் தேசிய அளவில் அனைத்துத் தரப்பினருக்குமானது. இயற்கையை, சக உயிர்களை நேசிக்கிற அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். என்றார்.