ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மைனா, கும்கி என இயற்கையின் பின்னணியில் படம் இயக்கிய பிரபுசாலமன் அடுத்து இயக்கி உள்ள படம் காடன். 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் காட்டு யானைகளின் தற்போதையை வாழ்வியல் தொடர்பானது. ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வருகிற 26ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து இயக்குனர் பிரபுசாலமன் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு படத்திற்கும் நான் நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் வழக்கமான கதையைச் சொல்லும் இயக்குநராக இருக்க விரும்பவில்லை. நாட்டுக்காக, சமூகத்துக்காக, காதலுக்காகச் சண்டையிடும் ஒரு ஹீரோவை காட்ட விரும்பவில்லை. அதை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.
நமது சுற்றுச்சூழல், காடுகள், நம்மை போலவே வாழும் உரிமை உள்ள விலங்குகள் இவற்றை பற்றி யார் பேசுவது. காடுகளில் யானையின் பங்கு மிகப்பெரியது. கும்கி எடுக்கும்போது யானைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். இந்தியாவில் யானைகளின் நிலை என்ன என்பது குறித்து உண்மைக்கு நெருக்கமாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் காடன். இந்த படம் தேசிய அளவில் அனைத்துத் தரப்பினருக்குமானது. இயற்கையை, சக உயிர்களை நேசிக்கிற அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். என்றார்.