ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
“அதிமேதாவிகள், காவல்துறை உங்கள் நண்பன்” படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆர்டிஎம் எனும் ரஞ்சித் டி.மணிகண்டன் - நடிகர் சுரேஷ் ரவி கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளார்கள். இன்னும் தலைப்பிடப்படாத இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார்.
இயக்குனர் ஆர்டிஎம் கூறுகையில், “காவல்துறை உங்கள் நண்பன்” படம் அனைத்து தரப்பில் இருந்தும் மிகச்சிறந்த பாராட்டுக்களை பெற்று தந்தது. அந்தபடத்தில் காவல்துறையின் கருப்பு பக்கத்தை காட்டிய நிலையில் நாயகன் சுரேஷ் ரவி, தற்போது உருவாகவுள்ள படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழின் பிரபல நடிகர்கள் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். கே.எஸ்.விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் படத்தின் இசையமைப்பாளரை இறுதி செய்யவிருகிறோம். சென்னை, பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவக்கப்பட்ட நிலையில் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பை துவங்கவுள்ளோம் என்றார்.