பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளார்கள். மேலும், மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் ஒரு விஷயம் ஆரம்பிக்கப்பட்டால் அதை மற்ற சில மாநிலங்களும் பயன்படுத்த ஆரம்பிக்கும். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டிலும் அது போன்ற உத்தரவு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதேயில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அமல்படுத்தபடும் ஒரு சூழல் உருவாகி வருகிறது என்றே சொல்கிறார்கள்.