விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் |
பான்இந்தியா படமான சலாரில் முதன்முறையாக பிரபாசுடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ளார் ஸ்ருதி.
இதையடுத்து அவர் அளித்த ஒரு பேட்டியில், டோலிவுட்டில் நான் ஜோடி சேராமல் இருந்த ஒரே ஹீரோ பிரபாஸ். அவருடனும் இப்போது இணைந்து விட்டேன். இந்த சலார் படப்பிடிப்பு செட்டில் பிரபாஸ் மிக பணிவுடன் நடந்து கொண்டார். அது எனக்கு அவர் மீது வியப்பினையும், மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரிடத்திலும் இயல்பாக பழகுவதோடு, செட்டில் நல்ல அதிர்வுகளை கொண்டு வரும் ஒருவர் என்றும் அந்த பேட்டியில் பிரபாஸ் பற்றி கூறியிருக்கிறார்.
அதோடு, சலார் படத்தின் தனது கேரக்டர் பற்றி தெரிவிக்காத ஸ்ருதிஹாசன், இந்த படத்தில் எனக்கு எந்த ஆக்சன் காட்சியும் கிடையாது. சலார் ஒரு அதிரடியான ஆக்சன் படமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.