மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பான்இந்தியா படமான சலாரில் முதன்முறையாக பிரபாசுடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ளார் ஸ்ருதி.
இதையடுத்து அவர் அளித்த ஒரு பேட்டியில், டோலிவுட்டில் நான் ஜோடி சேராமல் இருந்த ஒரே ஹீரோ பிரபாஸ். அவருடனும் இப்போது இணைந்து விட்டேன். இந்த சலார் படப்பிடிப்பு செட்டில் பிரபாஸ் மிக பணிவுடன் நடந்து கொண்டார். அது எனக்கு அவர் மீது வியப்பினையும், மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரிடத்திலும் இயல்பாக பழகுவதோடு, செட்டில் நல்ல அதிர்வுகளை கொண்டு வரும் ஒருவர் என்றும் அந்த பேட்டியில் பிரபாஸ் பற்றி கூறியிருக்கிறார்.
அதோடு, சலார் படத்தின் தனது கேரக்டர் பற்றி தெரிவிக்காத ஸ்ருதிஹாசன், இந்த படத்தில் எனக்கு எந்த ஆக்சன் காட்சியும் கிடையாது. சலார் ஒரு அதிரடியான ஆக்சன் படமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.