பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகர் லால். கடந்த சில வருடங்களாகவே தமிழில் நடிக்காமல், இடைவெளி விட்டிருந்த லால், தற்போது தனுஷின் கர்ணன், கார்த்தியின் சுல்தான், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் பிரபு நடிக்கும் படம் என தனது இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பிஸியாகியுள்ளார்.
நடிகர் லாலின் அடையாளமே அவரது தாடி தான். ஆனால் சமீப நாட்களாக மீசையில்லாமல் மழுமழுவென ஷேவ் செய்த முகத்துடன் தான் காட்சி தருகிறார் லால். ஆனால் தாடியை அவர் தியாகம் செய்ததற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடிக்கும் மலையமான் கதாபாத்திரத்திற்காக பெரிய மீசை, தாடியுடன் நடிக்க வேண்டி இருக்கிறதாம். அதனால் அடிக்கடி செயற்கை தாடி, மீசையை ஒட்டி பிரிப்பதில் வலியுடன் கூடிய சிரமம் ஏற்பட்டதால் தான், தாடியையே தியாகம் செய்து விட்டாராம் லால்.