புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
கடந்த சில வருடங்களுக்கு முன் மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் மீனா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு, தெலுங்கிலும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். இந்தநிலையில் த்ரிஷ்யம்-2 படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி முதல் பாகத்தை போன்றே வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தெலுங்கிலும் வெங்கடேஷ்-மீனா நடிப்பில் த்ரிஷ்யம்-2 படத்தின் படப்பிடிப்பு சுடச்சுட ஆரம்பித்து விட்டது. இந்தமுறை ஜீத்து ஜோசப்பே தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார். இந்த இரண்டாம் பாகத்தில் மலையாளத்தில் படம் முழுதும் வரும் புதிய ஐஜி கதாபாத்திரத்தில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார். தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் ராணாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். வெங்கடேஷும் ராணாவும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் ராணா ஒப்புக்கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.