'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடமிருந்து ரூ. 70 லட்சத்தை நடிகர் ஆர்யா வாங்கியதாகவும், அதை திருப்பித்தர மறுப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், ஆர்யா மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரினை தமிழக உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் கோபால்ஜா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் ஆகியோருக்கு அந்த புகாரை அனுப்பியுள்ளார் விட்ஜா.
அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் தற்போது ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறேன். கொரோனா சமயத்தில் தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்ன நடிகர் ஆர்யா, என்னிடத்தில் ரூ.70 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கினார். அதோடு தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னவர், பின்னர் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து ஆர்யாவிடம் கேட்டபோது தன்னை தவறான வார்த்தைகளில் திட்டினார். நான் இந்த மோசடி குறித்து புகார் கொடுப்பேன் என்று சொன்னபோது, அப்படி செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஆர்யா நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரபரப்பு செய்திகள் வெளியானபோதும் இன்னமும் ஆர்யாதரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நடிகர் ஆர்யா 2019ஆம் ஆண்டில் தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த பாலிவுட் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.