ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 13ம் தேதி வெளியானது.
படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களின் வரவேற்புடன் நல்ல வசூலை ஈட்டியது. அப்போது 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. அந்த சிக்கலிலும் அரங்குகள் நிறைந்து வசூலும் குவிந்ததாக தியேட்டர்காரர்கள் தெரிவித்தார்கள்.
இருப்பினும் கடந்த மாதம் 29ம் தேதி படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட்டார்கள். அதில் வெளியான பின் தியேட்டர்களுக்கு அப்படத்தைப் பார்க்க மக்கள் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனால், அதையும் மீறி கடந்த ஒரு மாத காலமாக தியேட்டர்களுக்கு மக்கள் வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
படம் வெளியாகி 45 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் 50வது நாளைத் தொட உள்ளது. நாளை கூட சில தியேட்டர்களில் மாலை காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஓடிடி தளத்தில் மட்டும் படம் வெளியாகாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கலாம் என்பது தியேட்டர்காரர்களின் எண்ணமாக உள்ளது.