பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சமுத்திரகனி நடிப்பில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். விஜய் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். இந்த தகவல் வெளிவந்ததும் அப்பா பதிவு செய்ய இருக்கும் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. எனது படத்தையோ பெயரையோ அவர் பயன்படுத்தக்கூடாது என்று விஜய் அறிவித்தார்.
மகனின் எதிர்ப்பை தொடர்ந்து கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாபஸ் பெற்றார். என்றாலும் மன்றத்தில் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களை விஜய் களையெடுத்தார். அப்பாவுக்கும், மகனுக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளார். இதற்கு செக்யூர் அவர் சிட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்.
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக நான் ஒரு முயற்சி எடுத்திருக்கிறேன். அந்த முயற்சியின் முதல்படி தான் இது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றிய விரிவான அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று தெரிகிறது.