பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்காக புதிதாக, 'மாஜ்ஜா' என்ற பெயரில், இசை நிறுவனத்தை ஏ.ஆர்.ரகுமான் துவக்கியுள்ளார். சென்னையில் விரைவில், 'யாழ்' என்ற, இசை திருவிழாவையும், அவர் நடத்த உள்ளார்.
கிராமி மற்றும் ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்; புதிய முயற்சியாக தொழில்நுட்பம் சார்ந்து, 'மாஜ்ஜா' என்ற, புதிய இசை நிறுவனத்தை துவக்கியுள்ளார். அடுத்த தலைமுறை இசை கலைஞர்களின் திறன்மிகு படைப்புகளை, உலகளவில் கொண்டு செல்வதை குறிக்கோளாக கொண்டு, இதை ஆரம்பித்துள்ளார்.அத்துடன், யாழ் இசை திருவிழா வாயிலாக, இளம் திறமையாளர்களையும் வெளிப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:மாஜ்ஜா நிறுவனம், சுயாதீன இசை முயற்சிகளுக்கான மேடையாக இருக்கும். படைப்பு சுதந்திரத்தின் முழுமையை அளிப்பதுடன், திறமையாளர்களை உலகளவில் எடுத்து செல்வதே, இதன் குறிக்கோள்.திறமையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள், எந்த ஒரு அடையாளமும் வெளிப்படாமலேயே, காணாமல் போய்விடுகின்றனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், திறமையானவர்களுக்கான தடைகள் உடைக்கப்படும். தொழில் நுட்பத்தால் இசைக்கலைஞர்களுக்கு புது யுகம் படைப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.