அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. |
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், அனைவருக்குமே ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் லாக்டவுனில் இருக்கிறேன் என்று சொல்லி கண்கலங்கியிருந்தார் வடிவேலு. இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து தற்போது வடிவேலு இரண்டு புதிய படங்களில் கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, மெட்டிஒலி சீரியல் மூலம் புகழ் பெற்ற திருமுருகன் அதையடுத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்களிலுமே வடி வேலுவும் நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த படியாக சத்யஜோதி பிலிம்சுக்காக தான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு-ஆர்.ஜே.பாலாஜி இருவரையும் இணைத்து இயக்கப்போ¡கிறாராம் திரு முருகன்.
அதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.