சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசுகள் களம் இறங்குகிறார்கள். ஆனால், ஒரு சிலர் தான் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு வாரிசுகள் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சரியம் தான். நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி இருவரும் தான் அந்த வாரிசுகள்.
2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படம் வெளிவந்தது. முதல் படத்திலேயே கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார் கார்த்தி. ஆனால், அவருடைய இரண்டாவது படம் வெளிவர ஏறக்குறைய மூன்று வருடங்களாகிவிட்டது.
“ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி” என இதுவரையில் தான் நடித்த 19 தமிழ்படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான 14 வருடங்களில் 19 படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமானதுதான். அவர் நடித்து முடித்துள்ள 'சுல்தான்' படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.