கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசுகள் களம் இறங்குகிறார்கள். ஆனால், ஒரு சிலர் தான் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு வாரிசுகள் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சரியம் தான். நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி இருவரும் தான் அந்த வாரிசுகள்.
2007ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படம் வெளிவந்தது. முதல் படத்திலேயே கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்து தனி முத்திரை பதித்தார் கார்த்தி. ஆனால், அவருடைய இரண்டாவது படம் வெளிவர ஏறக்குறைய மூன்று வருடங்களாகிவிட்டது.
“ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி” என இதுவரையில் தான் நடித்த 19 தமிழ்படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான 14 வருடங்களில் 19 படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமானதுதான். அவர் நடித்து முடித்துள்ள 'சுல்தான்' படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார்.