கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
வருசம் 16 படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. கோயில் கட்டி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தர இடம் பிடித்தவர். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தன்னிடம் சுந்தர் சி காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகி விட்டதை மகிழ்ச்சியுடன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் குஷ்பு. அந்தப் பதிவில் அவர், 'சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும் செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.