தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அதனாலேயே தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து, அவர் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர்' படத்திற்கு தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப்படம் வரும் அக்-13ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இதன் மற்ற மொழி வெளியீட்டு உரிமைகளுக்கான வியாபாரம் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் சுமார் 42 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பப்ளிசிட்டி மற்றும் இதர செலவுகளை கணக்கிட்டால் சுமார் 50 கோடியை இந்தப்படத்திற்காக இறக்குகிறதாம் லைகா நிறுவனம், அதேசமயம், இந்த சூழலில், படத்தின் வசூலில் தனது 50 கோடி அசலுடன் லாபத்தையும் பார்க்கவேண்டிய ரிஸ்க் லைகாவுக்கு இருக்கிறது என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.