பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்த 'அஞ்சான்' படத்தை எடுத்த இயக்குனர் லிங்குசாமி அந்தப் படத்திற்காக மிகவும் கிண்டலடிக்கப்பட்டார். படமும் படுதோல்வியைத் தழுவியது.
அதன்பின் எப்படியோ சமாளித்து நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கினார். ஆனால், அப்படமும் தோல்வியைத் தழுவியது.
கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கும் லிங்குசாமி அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ள படத்தைத்தான் லிங்குசாமி இயக்கப் போகிறாராம். கதையைக் கேட்ட ராம் நடிக்க சம்மதித்துவிட்டதாகவும் தகவல்.
தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களைத் தயாரித்து அதில் நஷ்டமடைந்த காரணத்தால் லிங்குசாமியின் திரையுலக வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனை வைத்து தயாரித்த 'உத்தம வில்லன்' படம் பெரும் தோல்வியடைந்தது.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்து அவர்கள் தயாரித்து முடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' படமும் இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது.