ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
திரைப்பட நடிகைகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பாலிவுட் நடிகைகள் பலரும் 50 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார்கள்.
ஆனால், தென்னிந்திய நடிகைகள் அதிகபட்சமாக 15 மில்லியன் பாலோயர்களை மட்டுமே பெற்றுள்ளார்கள். இதுவரையில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகையாக காஜல் அகர்வால் உள்ளார். அவருக்கு 17.3 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். அவருக்கு அடுத்து ரகுல் ப்ரீத் சிங் 16.2 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஸ்ருதிஹாசன் 15.7 மில்லியன் பாலோயர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தற்போது நடிகை சமந்தா 15 மில்லியன் பாலோயர்களைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இளம் முன்னணி நடிகைகளான ராஷ்மிகா, பூஜா ஹெக்டே ஆகியோர் 12 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளனர்.
திருமணமான பின்னும் சமந்தா தனக்கான இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படத்திலும், தெலுங்கில் விரைவில் 'சாகுந்தலம்' படத்திலும் நடிக்க உள்ளார்.