சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டது. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், மற்ற மாநிலங்கள் அதற்கடுத்த மாதங்களில் தான் திறப்பதற்கு அனுமதித்தன. ஆனாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து மற்ற மாநிலங்களிலும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்தந்த மாநில திரையுலகினர் கோரிக்கை வைத்தனர்.
தற்போது ஆந்திர மாநிலம் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அந்த அனுமதியை நிலைமைக்கேற்ப மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 4 வாரங்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
கேரளாவில் இந்த மாதம் முடியும் வரை 50 சதவீத இருக்கைகள் தான் என அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுவிட்டது. தெலங்கானாவில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் தியேட்டர்களில் ரசிகர்கள் வருகை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.