இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சாதனை புரியும் 30 வயதிற்குக் கீழுள்ள சாதனையாளர்களை 'போர்ப்ஸ் இந்தியா 30, 30க்குக் கீழ்' என்ற தலைப்பில் பெருமைப்படுத்துகிறது.
கடந்த 2020ம் ஆண்டிற்கான அந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்துள்ளார். ஆன்லைன் விண்ணப்பங்கள், நடுவர் சிபாரிசுகள், போர்ப்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்கிறார்கள்.
அந்தப் பட்டிலில் என்டர்டெயின்மென்ட் பிரிவில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். நெட்பிளிக்ஸ் 'புல்புல்'லில் சிறப்பாக நடித்த நடிகை திரிப்தி டிம்ரியும் அந்தப் பிரிவுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு, அறிவியல், சமூக சேவை, இசை, மருத்துவம், தொழில், நிதி, உணவு, பேஷன், கல்வி, டிஜிட்டல், ஈகாமர்ஸ், விவசாயம், கலை, விளம்பரம் என பல்வேறு பிரிவுகளில் இப்படி 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தென்னிந்திய அளவில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே அதில் தேர்வாகி உள்ளார். “போர்ப்ஸ் 30 பட்டியலில் தேர்வாகியுள்ளது பெருமையாக உள்ளது,” என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.