சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள டீசர், டிரைலர்களில் ஏதாவது ஒரு டீசராவது ரீவைன்ட் ஷாட்களிலேயே இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'மாநாடு' படத்தின் டீசரை இன்று(பிப்., 3) சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர்.
அந்த டீசரின் 1 நிமிடம் 15 வினாடிகளில், 48 வினாடிகள் வரை காட்சிகள் ரீவைன்டில்தான் நகர்கின்றன. அதன்பிறகுதான் நார்மல் ஆக நகர்கின்றன. ஒரு நிமிடத்திலேயே எவ்வளவு பரபரப்பு காட்ட முடியுமோ அந்த அளவிற்கு பரபரப்பைக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது.
டீசரைப் பார்க்கும் போது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. கேஜிஎப் 2 டீசர் போலவே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் டைட்டில் கார்டைப் போட்டுவிட்டு ஐந்து மொழிகளில் டீசர் வெளியீடு என பப்ளிசிட்டி செய்கிறார்கள். ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஐந்து பிரபலங்கள் பட டீசரை வெளியிட்டு மேலும் பப்ளிசிட்டியைக் கொடுத்துவிட்டார்கள்.
டீசர் முழுவதிலும் சிம்புவின் காட்சிகள்தான் அதிகம் உள்ளன. பெயருக்கு கல்யாணி, எஸ்ஜே சூர்யா இருவரும் சில வினாடிகள் வந்து போகிறார்கள்.
இந்தப் படத்தை ஆரம்பிக்காமலேயே, ஒரு காலத்தில் 'டிராப்' செய்துவிடலாம் என ஏன் முடிவெடுத்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. விரைவில் ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்பது மட்டும் புரிகிறது. இந்த டீசரைப் போலவே படத்தையும் இரண்டரை மணி நேரம் பரபரப்பாகக் கொடுக்க வெங்கட் பிரபு முயற்சி செய்வார் என நம்புவோம்.