சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
தற்போது தயாரிக்கப்படும் சிறுபட்ஜெட் படங்கள் புதிய புதிய சப்ஜெக்டுகளை கொண்டதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது அங்காடி தெரு மகேஷ் நடிப்பில் உருவாகி உள்ள வீராபுரம் 220 என்ற படம் மணல் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. சுபம் சினி கிரியேஷன் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரித்துள்ளார். இதில் மகேசுடன், மேக்னா, மற்றும் வில்லனாக சதீஷ் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் செந்தில் குமார் கூறியதாவது.. வீராபுரம் 220 எனது முதல் திரைப்படம் ஆகும். இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கொள்ளையை மையப்படுத்தியும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக பேசியுள்ளது. இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. என்றார்.