ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தற்போது தயாரிக்கப்படும் சிறுபட்ஜெட் படங்கள் புதிய புதிய சப்ஜெக்டுகளை கொண்டதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது அங்காடி தெரு மகேஷ் நடிப்பில் உருவாகி உள்ள வீராபுரம் 220 என்ற படம் மணல் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. சுபம் சினி கிரியேஷன் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரித்துள்ளார். இதில் மகேசுடன், மேக்னா, மற்றும் வில்லனாக சதீஷ் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் செந்தில் குமார் கூறியதாவது.. வீராபுரம் 220 எனது முதல் திரைப்படம் ஆகும். இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கொள்ளையை மையப்படுத்தியும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக பேசியுள்ளது. இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. என்றார்.