முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் |
கடந்த 1991ல் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கேங்லீடர்'. விஜயா பப்பிநீடு என்பவர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக விஜயசாந்தி நடிக்க, முக்கிய வேடங்களில், அதாவது சிரஞ்சீவியின் அண்ணனாக நடிகர் முரளி மோகன் மற்றும் தம்பியாக சரத்குமார் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளியாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த அண்ணன் தம்பிகள் மூவரது சந்திப்பும் கூட, 30 வருடங்கள் கழித்து தற்போது எதிர்பாரதவிதமாக அரங்கேறியுள்ளது.
ஆம்.. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் இவர்கள் மீண்டும் ஒன்றாக சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டுள்ளனர். சிரஞ்சீவி ஆச்சார்யா படப்பிடிப்பிற்காகவும், சரத்குமார் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காகவும், முரளி மோகன் வேறு ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காவும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தற்போது தங்கி இருக்கின்றனர். அப்போது தான் ஏதேச்சையாக இவர்கள் மூவரது சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.