ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த 1991ல் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கேங்லீடர்'. விஜயா பப்பிநீடு என்பவர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக விஜயசாந்தி நடிக்க, முக்கிய வேடங்களில், அதாவது சிரஞ்சீவியின் அண்ணனாக நடிகர் முரளி மோகன் மற்றும் தம்பியாக சரத்குமார் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளியாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த அண்ணன் தம்பிகள் மூவரது சந்திப்பும் கூட, 30 வருடங்கள் கழித்து தற்போது எதிர்பாரதவிதமாக அரங்கேறியுள்ளது.
ஆம்.. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் இவர்கள் மீண்டும் ஒன்றாக சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டுள்ளனர். சிரஞ்சீவி ஆச்சார்யா படப்பிடிப்பிற்காகவும், சரத்குமார் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காகவும், முரளி மோகன் வேறு ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காவும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தற்போது தங்கி இருக்கின்றனர். அப்போது தான் ஏதேச்சையாக இவர்கள் மூவரது சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.




