புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் |
கடந்த 1991ல் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கேங்லீடர்'. விஜயா பப்பிநீடு என்பவர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக விஜயசாந்தி நடிக்க, முக்கிய வேடங்களில், அதாவது சிரஞ்சீவியின் அண்ணனாக நடிகர் முரளி மோகன் மற்றும் தம்பியாக சரத்குமார் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளியாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த அண்ணன் தம்பிகள் மூவரது சந்திப்பும் கூட, 30 வருடங்கள் கழித்து தற்போது எதிர்பாரதவிதமாக அரங்கேறியுள்ளது.
ஆம்.. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் இவர்கள் மீண்டும் ஒன்றாக சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டுள்ளனர். சிரஞ்சீவி ஆச்சார்யா படப்பிடிப்பிற்காகவும், சரத்குமார் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காகவும், முரளி மோகன் வேறு ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காவும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தற்போது தங்கி இருக்கின்றனர். அப்போது தான் ஏதேச்சையாக இவர்கள் மூவரது சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.