ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கொரோனா காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தவரான பாலிவுட் நடிகர் சோனு சூட், மும்பையில் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது கட்டடத்தை உரிய அனுமதி பெறாமல் ஹோட்டலாக மாற்றியது சம்பந்தமாக அவருக்கு மும்பை மாநகராட்சி கடந்த அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதை எதிர்த்து மும்பை சிவில் நீதிமன்றத்தில் நடிகர் சோனு சூட் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து அந்த கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அவர் உரிய அனுமதி பெறாமலேயே குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
அதையடுத்து மாநகராட்சி தனக்கு எதிரான நடவடிக்கை எடுக்காமல் இருக்க, மும்பை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை விதிக்க மனு ஒன்றினை தாக்கல் செய்தார் சோனுசூட். இந்நிலையில், இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.