பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
கொரோனா தொற்று பரவிய காலத்தில் இந்தியத் திரையுலகில் உள்ள மற்ற முன்னணி நடிகர்களை விட வில்லன் நடிகரான சோனு சூட் பல்வேறு உதவிகளைச் செய்தார். அவருடைய சேவை மனப்பான்மைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து மனதாரப் பாராட்டினார்கள்.
சோனு சூட் சேவையால் ஈர்க்கப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த நீச்சல் வீரரான 'டேன்க்பன்ட் சிவா' என்பவர் சோனு சூட் பெயரால் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள பிரபலமான ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து தத்தளித்த நூற்றுக்கணக்கானவர்களைக் காப்பாற்றியும், மூழ்கி இறந்து போனவர்களின் சடலங்களை மீட்டுத் தரும் சேவையைச் செய்பவர் சிவா. அவருக்கு மக்கள் அளித்த நன்கொடை மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்துள்ளார்.
“சோனு சூட் சேவை எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதனால்தான் அவரது பெயரைச் சூட்டினேன்,” என சிவா தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைத்துப் பேசிய சோனு, “இந்த ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைப்பது எனக்கு பெருமையாக உள்ளது. சிவாவைப் பற்றியும், அவரது சேவையைப் பற்றியும் நான் கேள்விப்பட்டுள்ளேன். அவரைப் போன்ற பல சிவாக்கள் நமக்குத் தேவை. ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.