இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ இடம் பெற்றார் அதில் எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியது. அதன் பின் வெளிவரும் அனைத்து படங்களிலும் அப்படியான காட்சிகள் வந்தால் அந்த எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுகின்றன. படத்தில் வரும் காட்சிகளுக்கே அவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்றால் அந்தப் படங்களுக்கான போஸ்டர்களிலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற குரல் சமீப காலமாக எழுந்துள்ளது.
பொது இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள், சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்படும் போஸ்டர்கள் ஆகியவற்றில் புகை பிடிக்கும் நடிகர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இடம் பெறுகிறது.
தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி', விஜய் நடித்த 'சர்க்கார்', சந்தானம் நடித்த 'டகால்டி' ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியான போது அப்படங்களின் நாயகர்கள் புகை பிடிக்கும் போஸ்டர்கள் தான் இடம் பெற்றன. அவற்றிற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியது. அதன்பிறகு அவற்றை வாபஸ் பெற்றார்கள்.
நேற்று செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' என்ற புதிய படத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் தனுஷ் சுருட்டு பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. அதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ''எத்தனை முறை எதிர்ப்புகள் வந்தாலும் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இப்படி புகைபிடிக்கும் போஸ்டர்களை வெளியிடும் நடிகர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கையும் சமூகவலைதளத்தில் எழுந்து வருகிறது.