என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கைய்யா. தற்போது பிரபல காமெடி நடிகரான செந்திலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.
இந்த படம் குறித்து டைரக்டர் சுரேஷ் சங்கைய்யா கூறுகையில், இந்த படம் சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் கதையில் உருவாகிறது. மொத்தம் இரண்டு முக்கிய கேரக்டர்கள். அதில் செந்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இன்னொரு நடிகரை இன்னும் முடிவு செய்யவில்லை. இவர்களுடன் சேர்த்து இன்னும் 4 கேரக்டர்கள் இந்த படத்தில் உள்ளன. இந்த ஆறு கேரக்டர்களை சுற்றித்தான் படத்தின் மொத்த கதையும் நடக்கிறது.
அதோடு, இந்த படம் சீரியசான கதையில் உருவாகயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. இப்படம் கியூமரான கதைக்களத்தில் உருவாகிறது என்று கூறிய சுரேஷ் சங்கையாவிடத்தில், காமெடி நடிகரான செந்திலை நாயகனாக நடிக்க வைப்பது ஏன்? என்று கேட்டபோது, செந்தில் இந்த படத்தில் ஹீரோ அல்ல. இந்த கதையில் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்களில் அவரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அந்த வகையில், செந்திலை இந்த படம் இதுவரை பார்க்காத ஒரு புதிய கோணத்தில் வெளிப்படுத்தும். இப்படத்திற்கான தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்கிறார் சுரேஷ் சங்கைய்யா.