பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து விட்டது. இறுதிப் போட்டிக்கு ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.
ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து போட்டியிலிருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த நடிகர் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.
இந்த சீசனிலும் அதே போல் பிக் பாஸ் குறிப்பிட்ட தொகையை வழங்க இருக்கிறாராம். இம்முறை பிக்பாஸ் கொடுக்கும் தொகையைப் பெற்றுக் கொண்டு ரம்யா பாண்டியன் வெளியேற இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. நாளை அல்லது அதன் மறுநாள் ஒளிபரப்பாகும் எபிசோடில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.
வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அன்றைய தினம் பிக் பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப் போகும் போட்டியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.