கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகளில் ஒன்றாக நவ., 10ல் முதல் சினிமா தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் தீபாவளியை முன்னிட்டும் கடந்த இரண்டு மாத காலமாகவும் சுமார் 40 படங்கள் வெளிவந்தன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கமே வரவில்லை. அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக வர மறுக்கிறார்கள் என்றே பேசப்பட்டது. அதேசமயம், ரசிகர்களை வரவழைக்கும் விதத்தில் முன்னணி நடிகர்களின் படங்களோ, தரமான படங்களோ வரவில்லை என்பதைப் பற்றி வெளிப்படையாக பேச மறுத்தார்கள்.
முன்னணி நடிகர்களின் படங்கள் தான் ரசிகர்களை வரவழைக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கம். விஜய் நடித்து வெளிவர உள்ள 'மாஸ்டர்' படத்திற்கான முன்பதிவு ஆரம்பமானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
13ம் தேதி புதன்கிழமை வெளியாகும் படத்திற்கு 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு ஏறக்குறைய முன்பதிவு முடிந்துவிட்டது. முக்கிய மாநகரங்கள், நகரங்களில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இருக்கைகள் காலியாக உள்ளன. அவையும் அடுத்த சில நாட்களில் நிறைந்துவிடும் என்கிறார்கள்.
கொரோனா தொற்று பயத்தையும் மீறி 'மாஸ்டர்' படத்திற்கு இப்படி ஒரு முன்பதிவு நடப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் முன்பதிவு நிலவரம் நிறைவாக உள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.