திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகளில் ஒன்றாக நவ., 10ல் முதல் சினிமா தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் தீபாவளியை முன்னிட்டும் கடந்த இரண்டு மாத காலமாகவும் சுமார் 40 படங்கள் வெளிவந்தன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கமே வரவில்லை. அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக வர மறுக்கிறார்கள் என்றே பேசப்பட்டது. அதேசமயம், ரசிகர்களை வரவழைக்கும் விதத்தில் முன்னணி நடிகர்களின் படங்களோ, தரமான படங்களோ வரவில்லை என்பதைப் பற்றி வெளிப்படையாக பேச மறுத்தார்கள்.
முன்னணி நடிகர்களின் படங்கள் தான் ரசிகர்களை வரவழைக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கம். விஜய் நடித்து வெளிவர உள்ள 'மாஸ்டர்' படத்திற்கான முன்பதிவு ஆரம்பமானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
13ம் தேதி புதன்கிழமை வெளியாகும் படத்திற்கு 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு ஏறக்குறைய முன்பதிவு முடிந்துவிட்டது. முக்கிய மாநகரங்கள், நகரங்களில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இருக்கைகள் காலியாக உள்ளன. அவையும் அடுத்த சில நாட்களில் நிறைந்துவிடும் என்கிறார்கள்.
கொரோனா தொற்று பயத்தையும் மீறி 'மாஸ்டர்' படத்திற்கு இப்படி ஒரு முன்பதிவு நடப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் முன்பதிவு நிலவரம் நிறைவாக உள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.