புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என திரையுலகினர் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று அரசு இன்று 100 சதவீத இருக்கை அனுமதிக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
“சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் ஆகியவை ஏற்கெனவே உள்ள 50 சதவீத அனுமதியிலிருந்து 100 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளுடன் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்படுகிறது. திரைப்படக் காட்சிகளுடன் கோவிட் 19 பற்றிய முன்னெச்சரிக்கை விஷயங்களைத் திரையிட்டு படம் பார்க்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவிற்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.