'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள 'ஈஸ்வரன்' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டில் பேசிய சிம்பு, ''இப்போதெல்லாம் நெகட்டிவிட்டி தான் அதிகம் உள்ளது. போட்டி, பொறாமை, அடுத்தவர்களை குறை சொல்வது இதெல்லாம் தான் அதிகம் நடக்கிறது. முதலில் நாம் பிறருக்கு அறிவுரை கூறுவதையும், மற்றவர்களிடமிருந்து அறிவுரை கேட்பதையும் நிறுத்த வேண்டும். மனது சுத்தமாக இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும்.
வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டேன். அந்த சோகத்தில் அதிக எடை போட்டேன், படப்பிடிப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை. ஆனால் இறைவன் என்னுடன் இருந்து எல்லாவற்றையும் மாற்றினார். கடவுள் வேறு எங்கும் இல்லை, உங்களுடன் தான் இருக்கிறார். இனி பேச ஒன்றுமில்லை செயல் தான். அடுத்ததாக மாநாடு, பத்து தல படங்களிலும் இது தவிர்த்து இன்னும் சில படங்களிலும் நடிக்கிறேன். மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுகிறேன், அது தீபாவளிக்கு வெளியாகும் என்றார்.