சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் |
ராதாமோகன் இயக்கிய 'கௌரவம்' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகர் அல்லு சிரிஷ்.. இவர் தெலுங்கு இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி. சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் வருண் தேஜ் இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
இந்தநிலையில் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அல்லு சிரிஷும் கொரோனா சோதனை செய்துகொண்டார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்ததில் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
இதுகுறித்து அல்லு சிரிஷ் கூறும்போது, “ஒன்றுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. திருமண நிகழ்வு, வெளியூர் பயணம், படப்பிடிப்பு என தினசரி வெளியே செல்லும்போது, கொரோனா பாதிப்புக்கு ஆளான ஒரு நபரையாவது நாம் சந்திக்காமல் கடந்துவிட முடியாது. அந்தவகையில் நான் மேற்கொண்டு வரும் ஆயுர்வேதமும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தான் என்னை கொரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றியுள்ளது என நம்புகிறேன். ஆயுஷ் கவாத், மிருத்யுஞ்ச ரசா என நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத பொருட்கள் எல்லாம் இன்னும் காலவாதி ஆகவிடவில்லை. அவையெல்லாம் அவர்கள் நமக்கு கொடுத்த, காலம் கடந்து நிற்கும் பரிசுகள்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் அல்லு சிரிஷ்..