வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ நடித்த ‛காந்தா' படம் பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் சம்பந்தப்பட்டது. அவரின் வெற்றி, தோல்வியை பேசுகிறது. அதை படக்குழு சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளது என்று செய்திகள் வந்தன. ஆனால், அது தவறான செய்தி என்று கூறப்படுகிறது. நேற்று பல இடங்களில் படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. அதை பார்த்தவர்கள் படத்தின் கதைக்கும் தியாகராஜ பாகதவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கதைப்படி, சமுத்திரக்கனி இயக்குனர், துல்கர் ஹீரோ, புதுமுக ஹீரோயின் பாக்யஸ்ரீயால் ஒரு பிரச்னை வருகிறது. அது என்ன? இயக்குனர், ஹீரோ ஈகோ பிரச்னை எதில் போய் முடிகிறது என்பது கதை. 1950களில் கதை நடக்கிறது. இந்த படத்துக்கும் எந்த உண்மை கதைக்கும் சம்பந்தம் இல்லை. படம் பார்த்தவர்கள் துல்கர் நடிப்பை புகழ்கிறார்கள். நாளை படம் வெளியானபின் ரசிகர்கள் கருத்து, வரவேற்பு தெரிய வரும். துல்கர் இதற்கு முன்பு நடித்த ப்ரீயட் படமான சீதா ராமம், லக்கி பாஸ்கர் படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் காந்தாவும் சேருமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.