தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பி.ஆர் டாக்கீஸ் கார்பரேஷன் சார்பில் ராஜபாண்டியன், பாஸ்கரன், டேங்கி இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் புதுமுகம் சுரேஷ் ரவியுடன் யோகி பாபுவும் இணை நாயகனாக நடிக்கிறார். தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
கே.பாலய்யா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: கிராமத்து பின்னணியில், கலக்கலான பேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக உருவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. என்றார்.