‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
பெரும்பாலும் நடிகைகள் நடிப்பதுடன் ஒரு சிலர் கூடுதலாக போனால் பாடுவது என்பதோடு மட்டும் தங்களது பணிகளை நிறுத்திக் கொள்வார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக மலையாளத்தில் நடிகைகள் சிலர் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கத்திலும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் என்பவர் தற்போது நடிகர் திலீப் நடித்து வரும் பா பா பா என்கிற படத்திற்கு கதை எழுதி உள்ளார். அதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தின் வெற்றிக்கு தனது திரைக்கதை அமைப்பால் உறுதுணையாக நின்று இருக்கிறார் நடிகை சாந்தி பாலச்சந்திரன்.
இவர் இந்த படத்தின் மூலம் தான் திரைக்கதை ஆசிரியராக மாறியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2017ல் நடிகர் தனுஷ் மலையாளத்தில் தயாரித்த தரங்கம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாந்தி பாலச்சந்திரன். அந்த படத்தின் இயக்குனர் டொமினிக் அருண் தான் தற்போது இந்த லோகா சாப்டர் 1 ; சந்திரா படத்தை இயக்கியுள்ளார். அதனால் சாந்தி பாலச்சந்திரனின் கதை உருவாக்கும் திறமையை அறிந்து கொண்டு அவரை இந்த படத்தில் திரைக்கதை எழுத உற்சாகப்படுத்தினாராம். தற்போது படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சாந்தி பாலச்சந்திரன்.