விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நடிகர் ராம்சரண் தெலுங்கில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் மைசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைசூரில் தங்கியிருந்த கர்நாடக முதல்வரான சித்ராமையாவை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்துள்ளார் ராம்சரண்.
இது குறித்து புகைப்படங்களுடன் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தெலுங்கு நடிகர் ராம்சரண் பெத்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துவரும் நிலையில், மைசூரில் என்னை சந்தித்து உரையாடினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சந்தோஷும் ராம்சரணை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.