மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
ராஜ்யசபா எம்பி ஆகிவிட்ட நடிகர் கமல்ஹாசன், முதன்முறையாக அரசு முத்திரை பதித்த லட்டர் பேட்டில் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசனை பாராட்டி, ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் எம்பி ஆனபின் முதல் கையெழுத்தும் இதுதான் என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த அகரம் 15 ஆண்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், என்னை சித்தப்பா என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என சூர்யா புகழ்கிறார். நான் அவரை தம்பி என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என யோசிக்கிறேன் என்று பேசினார்.
மேலும் என் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற, அண்ணன் சிவகுமார்தான் காரணம். அந்த காலத்தில் அவர் நமக்கு எதுக்கு ரசிகர் மன்றம் என கேட்டார். பாலசந்தரால் நான் நட்சத்திர அந்தஸ்து பெற என் மீது பாசத்தில் வந்தவர்களை நற்பணி மன்றத்தில் சேர்த்தேன் என்றார். மேலும் அகரம் பவுண்டேசன் பற்றி சமீபத்தில் முதல்வரிடம் கூட பேசினேன். இவர்களை போன்றவர்கள் பணம் கேட்கவில்லை. அனுமதிதான் கேட்கிறார்கள் அரசு உதவி செய்ய வேண்டும் என்றேன் என்றார்.
சூர்யா குடும்பம் கமல்ஹாசன் நட்பு அதிகமாகி வருவதால், வருங்காலத்தில் சூர்யா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர் 'கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் முழுநீள ஹீரோ வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது.