மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ராஜ்யசபா எம்பி ஆகிவிட்ட நடிகர் கமல்ஹாசன், முதன்முறையாக அரசு முத்திரை பதித்த லட்டர் பேட்டில் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசனை பாராட்டி, ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் எம்பி ஆனபின் முதல் கையெழுத்தும் இதுதான் என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த அகரம் 15 ஆண்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், என்னை சித்தப்பா என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என சூர்யா புகழ்கிறார். நான் அவரை தம்பி என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என யோசிக்கிறேன் என்று பேசினார்.
மேலும் என் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற, அண்ணன் சிவகுமார்தான் காரணம். அந்த காலத்தில் அவர் நமக்கு எதுக்கு ரசிகர் மன்றம் என கேட்டார். பாலசந்தரால் நான் நட்சத்திர அந்தஸ்து பெற என் மீது பாசத்தில் வந்தவர்களை நற்பணி மன்றத்தில் சேர்த்தேன் என்றார். மேலும் அகரம் பவுண்டேசன் பற்றி சமீபத்தில் முதல்வரிடம் கூட பேசினேன். இவர்களை போன்றவர்கள் பணம் கேட்கவில்லை. அனுமதிதான் கேட்கிறார்கள் அரசு உதவி செய்ய வேண்டும் என்றேன் என்றார்.
சூர்யா குடும்பம் கமல்ஹாசன் நட்பு அதிகமாகி வருவதால், வருங்காலத்தில் சூர்யா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர் 'கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் முழுநீள ஹீரோ வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது.