3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா |
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகனும், நடிகருமான ஷானவாஸ், 71, நேற்றிரவு காலமானார்.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகளுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரின் மறைவை அறிந்த கேரள திரையுலக கலைஞர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் 96 படங்களில் ஷானவாஸ் நடித்துள்ளார். 1981ம் ஆண்டு சினிமாவில் அவர் அறிமுகமானார். சென்னை நியூ கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போதே, பாலசந்திர மேனன் தான் இயக்கிய பிரேம கீதங்கள் படத்தில் ஷானவாசை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, கதாநாயகன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவரின் கடைசி படம் ஜன கண மன ஆகும். 1989ம் ஆண்டு பிரேம் நசீர் காலமான பின்னர் சில ஆண்டுகள் தமது நடிப்பை தொடர்ந்தார். பின்னர், திரைத்துறையில் இருந்து சில காலம் விலகி வளைகுடாவில் கப்பல் நிறுவனம் ஒன்றில் நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தார். சினிமாவில் சிறு சிறு வேடங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
மறைந்த ஷானவாசுக்கு ஆயிஷா பீவி என்ற மனைவியும் அஜித் கான், ஷமீர் கான் என்ற மகன்களும் உள்ளனர். ஷானவாஸ் இறுதிச் சடங்கு இன்று (ஆக.5) மாலை 5 மணி அளவில் பாளையம் ஜூம்மா மசூதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.