ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி அவர் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவரது இந்த பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது பெங்களூரு ரசிகர்களோ, ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூருவில் உள்ள பிருந்தா தியேட்டரில் ஒரு பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த விழாவில் மகேஷ் பாபுவின் மகனான கட்டமனேனி கவுதம் கிருஷ்ணாவின் 35 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட் வைத்து அவருக்கு ஒரு விழா நடத்துகிறார்களாம். தற்போது மகேஷ் பாபுவின் மகன் அமெரிக்காவில் திரைப்படம் சார்ந்த படிப்பை படித்து வருவதோடு, தான் நடிக்கும் சில வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆவார் என்றும் கூறப்படுகிறது.