ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
1998ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அங்கு 'சிங்காரா' என்ற அரிய வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 22ம் தேதி இந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு சில மாதங்களில் முடிந்துவிடும் என்றும் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே உடல்நலக்குறைவு, கொலை மிரட்டல் பிரச்னைகளுக்கு இடையில் இந்த வழக்கு சல்மானுக்கு மேலும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.