மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
வீர தீர சூரன் படத்துக்குபின் விக்ரம் யார் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த பட தயாரிப்பாளர் யார் என்று தெரியாமல் அவருடைய ரசிகர்கள் தவித்து வந்தார்கள். மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கலாம் என்று ஒரு பேச்சு வந்தது. அதேப்போல் 96 , மெய்யழகன் பட இயக்குனர் பிரேம்குமார் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப் போகிறார். தயாரிப்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்தது. பிரதீப் ரங்கநாதன் படத்தை அவர் இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இப்போது அது எதுவும் நடக்கவில்லை. புது கூட்டணி உருவாகிவிட்டது.
ஆம், வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் ஹீரோ, பிரேம் குமார் இயக்கப் போகிறார் என்று நேற்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிவிட்டது. தங்கலான், வீர தீர சூரன் ஓகே என்றாலும் பெரிய ஹிட்டாகவில்லை. அதனால், விக்ரம் ஒரு பெரிய வெற்றிக்காக பிரேம் குமாரை தேர்ந்தெடுத்தார் என தகவல். வேல்ஸ் நிறுவனம் 10 பெரிய படங்களை தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த பட்டியலில் விக்ரம் படமும் சேர்ந்துள்ளது.