பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

யாருடைய படங்கள் அதிகமாக வெற்றி பெறுகிறதோ, அதிக வசூலை கொடுக்கிறதோ அவர்கள்தான் சூப்பர் ஸ்டார். அந்த வரிசையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் ராஜேஷ் கண்ணா, தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ், கன்னட சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்.
ஆனால் இந்த சூப்பர் ஸ்டாருக்குள் சிக்காத சினிமா மலையாளம். காரணம் இங்கு சினிமா பெரும் கொண்டாட்டமாக இருக்கவில்லை. நாடகத்தின் இன்னொரு வடிவம் சினிமா என்று மலையாளிகள் எளிதாக எடுத்துக் கொண்டார்கள். என்றாலும் வெற்றி, வசூல் இவற்றை கணக்கிட்டு திக்குரிசி சுகுமாரன் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். 1990ல் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தி மலையாள சினிமா இதனை அறிவித்தது.
கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த திக்குரிசி சுகுமாரன், கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமையாளராக இருந்தார்.
இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். சுமார் 47 ஆண்டுகள் நீடித்த ஒரு வாழ்க்கையில், அவர் 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1993ம் ஆண்டில், மலையாள சினிமாவுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக கேரள அரசின் மிக உயர்ந்த கவுரவமான ஜே.சி. டேனியல் விருதைப் பெற்றார்.