கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
'குபேரா' படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்க உள்ள தமிழ்ப் படமாக 'அமரன்' இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான திரைக்கதை வேலைகள் இன்னும் முடியாத காரணத்தால் 'போர் தொழில்' இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 54வது படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 10) பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இப்படத்திற்குப் பிறகு தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படம் ஆரம்பமாகும் என்கிறார்கள். தனுஷின் அடுத்த வெளியீடாக 'இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள ஹிந்திப் படமான 'தேரே இஷ்க் மெயின்' நவம்பர் 28ம் தேதி வெளியாகிறது.
கடந்த மாதம் வெளியான 'குபேரா' படம் தமிழில் தோல்வியடைந்தது. தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், தனுஷ் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிப்பார் எனத் தெரிகிறது.