சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
'குபேரா' படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்க உள்ள தமிழ்ப் படமாக 'அமரன்' இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான திரைக்கதை வேலைகள் இன்னும் முடியாத காரணத்தால் 'போர் தொழில்' இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 54வது படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 10) பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இப்படத்திற்குப் பிறகு தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படம் ஆரம்பமாகும் என்கிறார்கள். தனுஷின் அடுத்த வெளியீடாக 'இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள ஹிந்திப் படமான 'தேரே இஷ்க் மெயின்' நவம்பர் 28ம் தேதி வெளியாகிறது.
கடந்த மாதம் வெளியான 'குபேரா' படம் தமிழில் தோல்வியடைந்தது. தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், தனுஷ் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிப்பார் எனத் தெரிகிறது.