கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சி.எச்.நாராயண மூர்த்தி இயக்கத்தில், 1967ல் வெளியான 'பக்த பிரகலாதா' படத்தை நம்மில் பலரும் பார்த்து இருப்போம். தமிழ், தெலுங்கில் வெளியான அந்த படத்தில் ரங்காராவ், அஞ்சலிதேவி நடித்து இருந்தவர், சிறுவன் பிரகலாதானாக நடிகை ரோஜா ரமணி நடித்தார். அந்த படத்தின் பாடல்களும், சீன்களும் இன்றும் பிரபலம். அதற்குபின் நரசிம்மர் குறித்து தமிழில் அதிக படங்கள் வந்தது இல்லை. இப்போது 'மஹாவதார் நரசிம்மா' என்ற பக்தி படம் வருகிறது. கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்க, க்ளீம் புரடக்சன்ஸ் “மஹாவதார் நரசிம்மா”வை தயாரித்துள்ளளது.
படம் குறித்து தயாரிப்பாளர் ஷில்பா தவான் கூறுகையில் '' 5 ஆண்டுகளின் இடைவிடாத உழைப்புக்குப் பிறகு, ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ வராஹரின் காவியக் கதையை, உலகிற்கு வெளிப்படுத்த நாங்கள் இறுதியாகத் தயாராகிவிட்டோம்! ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு இதயத்துடிப்பும் இந்த தெய்வீகக் கதையை உயிர்ப்பித்துள்ளன'' என்கிறார்.
இயக்குநர் அஷ்வின் குமார் கூறுகையில் ''இந்த அனிமேஷன் திரைப்படத்தின் டிரைலரை அவரது அருள் நிறைந்த இந்திரேஷ்ஜி மகாராஜ் புனித பூமியான பிருந்தாவனத்தில் வெளியிட்டார்'' என்றார். இந்த படம் தவிர்த்து, விஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை இந்த படக்குழு அடுத்தடுத்து படமாக்கி வெளியிட உள்ளது. முதற்கட்டமாக 3டி.,யில், ஐந்து இந்திய மொழிகளில், வரும் ஜூலை 25ல் 'மஹாவதார் நரசிம்மா' ரிலீஸ் ஆகிறது.