சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
சினிமாவில் கமல், 'சகலகலாவல்லவர்' தான். அதை நிரூபிப்பது மாதிரி ஒரு நிகழ்வு. இது நடந்தது 1962ம் ஆண்டு. அப்போது கமல் 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். தமிழ்நாடே 'குழந்தைன்னு இருந்தா இப்படி ஒரு குழந்தை இருக்கணும்' என்று பேசிக் கொண்டிருந்த நேரம். கமலை நேரில் பார்க்க மாட்டோமா என்று தமிழ்நாடு ஏங்கிக்கிடந்த நேரம்.
கமலின் அப்பா சீனிவாச அய்யங்கார் காங்கிரஸ்காரர், அவரது நண்பர் தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்த சங்கு தேவர். இவரின் மகன் டாக்டர் ஜே.எஸ்.ஆர்.பாண்டியனுக்கு திருமணம். அதற்காக சீனிவாச அய்யரிடம் அழைப்பிதழ் கொடுத்த சங்கு தேவர் கூடவே ஒரு கோரிக்கையும் வைத்தார். 'எங்க வீட்டு திருமண நிகழ்வுக்கு உங்க மகன் கமல் வர வேண்டும்' என்றார். அதற்கு சீனிவாசன், 'வர்றது என்ன வந்து ஆடச் சொல்றேன்' என்றார்.
அந்த திருமண நிகழ்ச்சியில் கமலும், அவரது சகோதரி நளினியும் மேடையில் குறவன், குறத்தி நடனம் ஆடினார்கள். அதோடு கமல் களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாடலையும் பாடினார். கமலை பார்ப்பதற்காக திருமண வீட்டை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் நின்று கொண்டிருந்தாக சொல்வார்கள்.
கமல்ஹாசன் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியின் படங்களை தற்போதும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்கள் டாக்டர் பாண்டியன் குடும்பத்தினர். பிற்காலத்தில் அவர் உலக நாயகனாக வருவார் என்பதெல்லாம் அப்போது அவர்களுக்கு தெரியாது.