சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பாலிவுட்டில் இருந்து வந்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு ஒரே படத்தில் நடித்து விட்டு மூட்டை கட்டிய காஜல் ஒருவரும் இருந்திருக்கிறார்.
1977ம் ஆண்டு வெளியான'ஹம் கிசிசே கம் நஹீன்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் காஜல் கிரண். இந்த படம் சூப்பர் ஹிட். உடனேயே, காஜல் கிரண் பாலிவுட்டில் ஒரு நிலையான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அதன்பிறகு 13 ஆண்டுகளில் 40 படங்களில் நடித்தார்.
ரிஷி கபூருடன் நடித்த 'ஹம் கிசிசே கம் நஹீன்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அந்த ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக மாறியது. இதைத் தொடர்ந்து, காஜல் கிரண் பல படங்களில் முன்னணி வேடத்தில் நடித்தார். அவற்றில் ஜிதேந்திராவின் 'மாங் பரோ சஜனா', மிதுன் சக்ரவர்த்தியின் 'வர்தாத்', 'ஹம் சே பட்கர் கவுன்' மற்றும் 'சபூத்' போன்றவை முக்கியமானவை. ஆனால் ஒரு கட்டத்தில் திடீரென சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.
தமிழில் 1985ம் ஆண்டு வெளிவந்த 'பந்தம்' படத்தில் நடித்தார். இதில் அவர் சிவாஜியின் மகளாகவும், ஆனந்த் பாபுவின் காதலியாகவும் நடித்தார். மேலும் இந்த படத்தில் ஷாலினி, நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், மனோரமா, வினு சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கே.விஜயன் இயக்கி இருந்தார்.
இது 'சக்கரயும்மா ' என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பணக்கார தந்தையின் மகள் ஒரு ஏழை வாலிபனை திருமணம் செய்து கொள்வதும், தந்தை பாசத்தால் துடிப்பதும், பின்னர் குடும்பம் ஒன்று சேர்வது மாதிரியான கதை.