சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள படம் 'பிரீடம்'. 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி உள்ளார். சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளனர். இந்த படத்தின் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் தேர்வானது குறித்து இயக்குனர் சத்யசிவா கூறும்போது
"இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். ஒருவரை நல்லவராகக் காட்ட, சில காட்சிகள் வைக்க வேண்டும். ஆனால் சசிக்குமாரை காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை.
படத்தின் முதல் ஷெட்யூலில் நாயகி இன்றியே படப்பிடிப்பு நடந்தது, கதைக்கேற்ற நாயகியே தேடிக் கொண்டே இருந்தோம். கடைசியாக லிஜோவை தேர்வு செய்தோம். காரணம் ஜெய்பீமில் அவரது நடிப்பு. அவரை பார்த்த உடனேயே ஒரு அப்பாவி பெண் என்ற நினைப்பு வந்து விடும், அமைதியான அடக்கமான பெண் என்கிற எண்ணம் வந்து விடும் அதற்காகவே அவரை தேர்வு செய்தோம். அவர் மலையாளியாக இருந்தாலும் இலங்கைத் தமிழைக் கற்றுக் கொண்டு பேசியுள்ளார் . லிஜோ வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாக இருந்தது" என்றார்.




